Monday, December 26, 2011

நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” .................!

நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்ற சிறுகதைத் தொகுதிக்கான அறிமுக அரங்கு 17.12.2011 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. எழுத்தாளர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் தலைமையில் நெல்லியடியில் அமைந்துள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை சின்னராஜா விமலனும் அறிமுகவுரையை செல்லத்துரை சுதர்சனும் நிகழ்த்தினர்.
நூல் பற்றிய கருத்துரைகளை குப்பிழான் ஐ. சண்முகன், தானாவிஷ்ணு, கிருஷ்ணபிள்ளை நவநீதன் ஆகியோர் நிகழ்த்தினர்.  நன்றியுரையை சு.குணேஸ்வரனும் ஏற்புரையை நந்தினி சேவியரும் நிகழ்த்தினர்.
‘பறைதல் பகிர்தல் பதிதல்’ என்ற மகுட வாக்கியத்துடன் இலக்கியச் செயற்பாட்டுக்கு களம் அமைக்க முகிழ்த்துள்ள ‘உயில்’ அமைப்பின் முதலாவது நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





1 comment: