Sunday, June 26, 2011

பெண்ணாய் நான்.........!

தலைமுறை தலைமுறையாய்


தாழ்வாரத்திலும்

வீட்டு முகட்டிலும்

கட்டித்

தொங்கும் மூட்டைகளை

ஒற்றை இரவில்

அவிழ்த்தெறிவது

முடியுமான காரியமில்லை எனக்கு.

முட்டிகளை உடைத்தும்

தலைமுடிகளை அறுத்தும்

நிர்வாணங்களை

அம்பலப்படுத்தியுமான வலிகள்

எங்கள் வளவுகளில் (காணி)

நிறையவே.

காலத்தின் விந்துகள்

கடல் கடந்து

கலய அடுக்குகள் மாறியபோதும்

உட்சுவர்கள் மாறாமலேயே.

ஒவ்வொன்றும் இறுக்கமாய்

சிலவற்றைத் தளர்த்தியபோதும்

தளர்த்த முயலும் விரல்களுக்குள்

இன்னும் இன்னும்

இறுக்கமாய் இருக்கும்

கோட்பாடுகளும் கலாசாரங்களும்.

தலைமுறை தலைமுறையாய்

கட்டி வைத்த மூட்டை முடிச்சுகளை

அவிழ்க்கவே முடியாமல்

சமூக விலங்குகளோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

http://kuzhanthainila.blogspot.com/

No comments:

Post a Comment