Tuesday, July 12, 2011

கலாநிதி ந. இரவீந்திரனின் தாயார் திருமதி நடேசன் சிவயோகம் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்

கலாநிதி ந. இரவீந்திரன் அவர்களின் தாயார் திருமதி. நடேசன் சிவயோகம் 12-07-2011 அன்று இறந்துவிட்டார். அவரது பூதவுடல் யாழ். பண்டதரிப்பில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழியல் சூழலில் சமூகவியல் தொடர்பான ஆய்வுகளை வெளிக்கொணர்ந்ததில் ந.இரவீந்திரனுக்கு முக்கிய இடமுண்டு. இலங்கையில் மட்டுமன்று இந்தியாவிலும் இவரது ஆய்வுகள் கணிப்புக் குரியனவாக உள்ளன. அவரை இத்துறையில் வளர்ப்பதற்கும் தொடர்ந்து அவரது ஆய்வுகள் வெளிவருவதற்கும் பங்களிப்பு நல்கிய அவரது தாயாருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை முச்சந்தி கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment