Tuesday, December 11, 2012

லெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் நூல் வெளியீட்டு நிகழ்வு


எதிர்வரும் 16-12-2012 அன்று திரு லெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வை பி. ப. 4.00 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் பாக்கியா பதிப்பக்கத்தாரும், முச்சந்தி இலக்கிய வட்டத்தினரும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளனர். மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில் திரு. டொமினிக் ஜீவா, போராசியர்கள் சோ. சந்திரசேகரன், சபா. ஜெயராசா, தினக்குரல் பிரதம ஆசிரியர். வீ. தனபாலசிங்கம், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர் பிரபாகரன், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் மற்றும்   இர சிவலிங்க நினைவுக் குழுவின் தலைவர் எம் வாமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர் தை தனராஜ் ஆசியோர் அதிதிகளாக கலந்து சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வில் நூல் வெளியீட்டுவுரையை மல்லியப்பு சந்தி திலகரும் ஆய்வுரையை கலாநிதி. ந. இரவீந்திரனும் மற்றும் கருத்துரைகளை திரு. அந்தனிஜீவாவும் , சட்டத்தரணி மர்சூம் மெளலானாவும் வழங்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இந்நூலை பாக்கியா பதிப்பகத்தின் உரிமையாளர் திருமதி பாக்கியம் மயில்வாகம் அவர்கள் வெளியீட்டு வைப்பார்.  

No comments:

Post a Comment