Thursday, December 27, 2012

இரு இலக்கிய நிகழ்வுகள்


இலங்கையில் சமூகமாற்றத்திற்கான 
முதல் பெண் குரல்- சிறப்புரை
இலங்கையில் சமூகமாற்றத்திற்கான முதல் பெண் குரல்- திருமதி கோ.ந. மீனாட்சியம்மாளை முன்னிறுத்தி..! என்ற தலைப்பிலான இலக்கிய கருத்தாடலொன்றினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வில் நடாத்தவுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 02-01-2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் திருமதி வசந்தி தயாபரன் தலைமையில் நடைப்பெறும். நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் சிப்புரையாற்றவுள்ளார். இறுதியில் சபையோர் கலந்துரையாடல் நடைப்பெறும்.

இன்றைய சமூகப் பண்பாட்டு நெருக்கடிகளும் 
செல்நெறிக் குறித்த தேடல்களும் - ஒரு கருத்தாடல் 
இன்றைய சமூகப் பண்பாட்டு நெருக்கடிகளும் செல்நெறிக் குறித்த தேடல்களும் என்ற தலைப்பில் கருத்தாடல் அரங்கு ஒன்றினை புதிய பண்பாட்டுக்கான வெகுஜன தளம் ஒழுங்கமைத்துள்ளது. இந்நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 06- 01-2013 அன்று மாலை: 4.00 மணிக்கு கலாநிதி ந. இரவீந்திரன் தலைமையில் நடைப்பெறும். வுpமர்சனக் கருத்தாடலில் திருவாளர்கள் . தி.ஸ்ரீதரன் (சுகு),  மல்லியப்புசந்தி திலகர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, கொ. பாபு, ஆகியோர் கலந்துக்கொள்வார்கள். இந்நிகழ்வில் சிறப்பம்சமாக சபையோர் கருத்தாடல் நடைப்பெறும்.  

No comments:

Post a Comment